Sunday, November 1, 2009

சந்திரோதயா போக்ரே மரணம்

நவிமும்பை கலம்போலியில் வசித்து வந்த சந்திரோதயா நாராயண் போக்ரே கடந்த அக்டோபர் 25ம் தேதி மரணமடைந்தார். மராத்தியரான போக்ரே நவிமும்பை ஏபிஎம்சி மார்க்கெட்டில் டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஆவார். இவர் தமிழர் மராட்டியர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவிகளை செய்து வந்தார். அவருக்கு நவம்பர் 1ம் தேதி காலை 9.25 மணியளவில் கலம்போலி சௌரப் கோ-ஆபரேடிவ் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டத்தில் கலம்போலி தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த பல தமிழர்கள் கலந்துகொண்டனர்.

விஜய் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா



அம்பிவிலி திப்பன்னா நகரில் அக்டோபர் 31ம் தேதி நடிகர் விஜய் மக்கள் இயக்க கிளையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மும்பை மாநகரத் தலைவரான ஏ.விஜய் மணி மன்றக் கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில் ஐயப்பன், திரிசங்கு, ஜி. தினேஷ், டி.வடிவேல், வெங்கடேஷ், பாண்டியன், பாபு முதலானோர் கலந்துகொண்டனர். விழாவில் வேட்டி, சேலை, இலவச நோட்டுப்புத்தகம், பேனா வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

வங்கியில் போடாத பணம்


வங்கியில் போடாத பணத்தை
எடுக்க முடியாதது போல
புத்தகங்கள் படிக்காத வரை
எழுத முடியாது -
உருதுக் கவிஞன் சைஃபி

செ. அப்பாத்துரைக்கு மனிதநேய விருது

மராட்டிய மாநில சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் 5வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ப்ராம்ட் பிரிண்டர்ஸ் உரிமையாளரும், செல்லத்தங்க அறக்கட்டளை நிறுவனருமான செ. அப்பாத்துரைக்கு மனித நேய விருது வழங்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநில முன்னாள் தலை செயலாளர் வி.ரெங்கநாதன் ஐஏஎஸ் இந்த விருதினை வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு லேபர் விங் பொதுச் செயலாளர் எஸ். முருகேசன், டாக்டர் கே. எஸ். மணி மற்றும் கவிஞர் குணா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் விருதுக்கு பரிந்துரை செய்த மராட்டிய மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் கே.எஸ். மணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் நடைபெறும் ஜெபத் திருவிழாவில் டாக்டர் பால் தினகரன் பங்கேற்கிறார்


மும்பையில் நவம்பர் 6,7 மற்றும் 8ம் தேதிகளில் மாலை 5.30 மணியளவில் பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸ் திடலில் டாக்டர் பால் தினகரன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று தேவ செய்தி வழங்க இருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிய விரும்புபவர்கள் 022-25007733, 9930955928 எண்களில் தொடர்புகொள்ளலாம்.