Monday, November 2, 2009

தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது

மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் 61-ம் ஆண்டு விழா, இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா, சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாட்டுங்கா லேபர் கேம்ப் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சங்கரன் தலைமை தாங்க, சங்கத் தலைவர் கே.பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தாராவி பகுதி எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட், நவாப், ஓய்பெற்ற எம்டிஎன்எல் உதவி பொது மேலாளர் சந்திரசேகர், முப்பிடாதி, உத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பூமிநாதன், செயலாளர் ஜீவமணி, பொருளாளர் சுப்பையா, துணைத் தலைவர் நயினார், துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

மும்பை களிகை சேவா சங்கம் வாழ்த்து



நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாக குழு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மகர்த்தா எஸ். ஆனந்த ராஜாவுக்கு மும்பை கள்ளிகுளம் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.