Saturday, December 5, 2009

மராட்டிய மாநில பார்கவ குல சங்க ஆலோசனைக் கூட்டம்



மும்பையில் மராட்டிய மாநில பார்கவ குல சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவிலேயே சீரும்சிறப்பாக இயங்கும் பல்கலைகழகம் எஸ்ஆர்எம் பல்கலைகழகம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய தலைமுறை பத்திரிகை இளைஞர்களுக்காக குறைந்த விலையில் புதிய தலைமுறை வார இதழை வெளியிட்டு வருகிறது. எனவே இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மும்பையில் பாராட்டு விழா நடத்துவதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் நவம்பர் 29ம் தேதி தாராவி 90 அடிச்சாலையில் உள்ள எஸ்.ஏ. சுந்தர் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு எஸ்.ஏ.சுந்தர் தலைமை, மலரரசன் முன்னிலை வகிக்க, மராட்டிய மாநில தலைவர் மற்றும் விழா அமைப்பாளர் ராஜா உடையார், சிறப்பு விருந்தினர்களாக தாயகத்திலிருந்து வருகை தந்த பார்கவ குல இணை பொதுச் செயலாளர் பி. சி. செங்குட்டுவன், சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ். சீனிவாசன் உடையார், வடகிழக்கு மும்பை மாவட்ட தலைவர் உதயம் சாமி, ஏ. அண்ணாத்துரை உடையார், மத்திய மும்பை மாவட்டத் தலைவர் அறிவழகன், வடகிழக்கு மும்பை மாவட்ட செயலாளர் எஸ். செல்வராஜ் சாமி, மாநில செயலாளர் கென்னடி, பொருளாளர் கே. தென்னரசு, மும்பை பிரதேச தலைவர் செல்லப்பா உடையார், மும்பை மாநகர இளைஞரணித் தலைவர் தங்கமணி, நியூ மும்பை மாவட்ட தலைவர் ராயர், அந்தேரி கோவிந்த சாமி, அந்தேரி பச்ச முத்து உடையார் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கூட்டத்தில் எஸ்ஆர்எம் கல்லூரி வேந்தர் டி.ஆர். பச்ச முத்து உடையார் அவர்களையும் புதிய தலைமுறை வார இதழின் நிர்வாக ஆசியர் ஆர்.பி. சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எஸ்.ஏ.சுந்தர், மலரரசன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர். செங்குட்டுவன் பேசும்போது அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சீனிவாச உடையார் பேசும்போது சமுதாயத்திற்கு தேவையான கல்வி தொடர்பான உதவிகளை செய்ய சங்கம் தயாராக உள்ளது என்று கூறினார்.

ராஜா உடையார் பேசும்போது தமிழகத்தில் பள்ளிகளில் இந்தி மொழியை விருப்பப் பாடமாக வைக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மும்பையில் செயல்படும்போது ஜாதி வெறி இல்லாமல் சகோதர பாசத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் மும்பையில் பாராட்டு விழா நடத்துவதற்கான தேதிகளை குறிப்பிட்டு தமிழக தலைமைச் சங்கத்திற்கு அனுப்புவது மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தேதியில் விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மராட்டிய மாநில துணைத் தலைவர் டி. கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். மதிய உணவு மாநில இணைச் செயலாளர் தொழிலபர் ஜான் கென்னடி சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மராட்டிய மாநில தலைவரும் விழா அமைப்பாளருமான ராஜா உடையார் சிறப்பாக செய்திருந்தார்.