Saturday, October 31, 2009

மும்பையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102 வது ஜெயந்தி விழா


மும்பையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழா தாராவி கல்யாண்வாடி, சயான்கோலிவாடா, செம்பூர், நவிமும்பை கார்கர் கிளைகளில் கொண்டாடப்பட்டது. தாராவி தேவர்நகர், ஸ்ரீகணேசர் ஆலயத்தில் பால்குடம் எடுத்தல், அன்னதானம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சயான் கோலிவாடாவில் மராத்திய மாநில தேவர் முன்னேற்றப் பேரவையின் சார்பில் குரு பூஜை நடத்தப்பட்டது. பேரவையின் தலைவரான கேப்டன் தமிழ்ச் செல்வன் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

பொற்கோ நற்பணி மன்றத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது


மராட்டிய மாநில பொற்கோ நற்பணி மன்றத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா தானாபந்தரில் உள்ள நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில அமைப்பாளர் இடையன்குளம் பாஸ்கர் தலைமை தாங்க பகுதி அமைப்பாளர் ஸ்டெல்லா தொடக்க உரையாற்றினார். தென்மும்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிர்மல்ஜி, நவநிர்மாண் சேனா பிரமுகர் காவ்டே, கொலாபா பகுதி மன்ற அமைப்பாளர் பரிமளம், கோகிலா உத்தமன் ஆகியோர் முன்னிலை வகிக்க ஜெரிமெரி பகுதி விடுதலை சிறுத்தைகள் செயலாளர் எஸ். நாகராஜன் விழாவில் கலந்துகொண்டு இலவச சேலைகள், கம்பளி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Maharashtra state Porko Narpani Mandram’s 3rd year function started at the head quarters of Mandram in Thanebunder. State Organizer Idayangulam Baskar was presiding the function and area organizer Stella delivered inaugural address. South Mumbai Congress General Secretary Nirmalji, Navanirman Sena activist Gavde, Mandram’s Colaba area Organaizer Parimalam, Gokila Uttaman were present and Jarimari area Vidudalai Siruthaigal Secretary S. Nagarajan distributed free saris, blankets and provided welfare programs.

Friday, October 30, 2009

திரு எஸ்.ஏ.சுந்தரின் 53வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.




சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் நிறுவன தலைவர் திரு எஸ்.ஏ.சுந்தரின் 53வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மும்பை தாராவி பகுதியை சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காங்கிரஸ் தலைவருமான திரு. எஸ்.ஏ. சுந்தரின் 53வது பிறந்தநாள் விழா கடந்த அக்டோபர் 22ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வடமத்திய மும்பை பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஏக்நாத் கெய்க்வாட் மற்றும் தாராவி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Mr. S.A. Sundar, founder president of Citizen’s Forum Maharashtra, well known social worker and Congress leader’s 53rd birthday was celebrated on October 22. Mr. Eknath Gaikwad, MP from North Central Mumbai and Mrs. Varsha Gaikwad, newly elected MLA from Dharavi were present on the occasion.