Showing posts with label தேவரின் 102 வது ஜெயந்தி விழா. Show all posts
Showing posts with label தேவரின் 102 வது ஜெயந்தி விழா. Show all posts

Saturday, October 31, 2009

மும்பையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102 வது ஜெயந்தி விழா


மும்பையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழா தாராவி கல்யாண்வாடி, சயான்கோலிவாடா, செம்பூர், நவிமும்பை கார்கர் கிளைகளில் கொண்டாடப்பட்டது. தாராவி தேவர்நகர், ஸ்ரீகணேசர் ஆலயத்தில் பால்குடம் எடுத்தல், அன்னதானம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சயான் கோலிவாடாவில் மராத்திய மாநில தேவர் முன்னேற்றப் பேரவையின் சார்பில் குரு பூஜை நடத்தப்பட்டது. பேரவையின் தலைவரான கேப்டன் தமிழ்ச் செல்வன் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார்.