Monday, November 9, 2009

வர்ஷா கெய்க்வாடிற்கு சிட்டிஸன் ஃபோரம் வாழ்த்து


தாராவி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வர்ஷா கெய்க்வாட் உயர்கல்வித்துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா சிட்டிஸன்போரம் அமைப்பின் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. சுந்தர், துணைத்தலைவர் என்.வி. குமார், இளைஞரணித் தலைவர் எம்.ஏ.சாமி, சயான் கோலிவாடா பகுதி தலைவர் ஏ. பெருமாள் தேவன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பிரதீக்ஷா நகரில் உள்ள வர்ஷா கெய்க்வாடின் வீட்டிற்கு சென்று பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைப்பைச் சேர்ந்த கண்ணன் தேவேந்திரா, கணேஷ் தேவேந்திரா, விஜய் அமிர்தராஜ், அன்சார் அலி, நூர் இஸ்மாயில், பாதர் அலங்காரம் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

மும்பையில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது

மும்பையில் நவம்பர் 6,7,8 தேதிகளில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்டது. பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பால் தினகரன் குடும்பத்தினர் கலந்துகொண்டு தேவ செய்திகளை வழங்கினர். இந்த செய்திகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்த பிரார்த்தனை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பிரார்த்தனை கமிட்டியின் தலைவர் குல் கிரப்லனி, தலைமை பாஸ்டர் சேகர் கல்லியான்புர், தகவல் மற்றும் செய்தி தொடர்பாளர் பிரயன் லோபோ, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சோமன் தாமஸ், பாஸ்டர் சம்பத் குமார், தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் முதலானோர் செய்திருந்தனர்.