Monday, November 23, 2009

மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபார முறை

மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரம் என்பது ஒரு நுணுக்கமான வியாபார முறை. இது மேற்கத்திய நாடுகளில் இன்னமும் சிறப்பாகவே நடந்து வருகிறது. பொதுவாக எந்த ஒரு வியாபார பொருளும் உற்பத்தியாளர்களிடமிருந்து பல கைகள் மாறி வாடிக்கையாளரை வந்தடைகிறது. இதனால் அந்த பொருளின் மதிப்பு தோராயமாக 4 முதல் 10 மடங்கு வரை அதிகரித்து விடுகிறது.

உதாரணமாக ஒரு பொருளை உற்பத்தி செய்ய ரூ. 10 செலவாகிறது என்றால் அது நுகர்வோரை அடையும்போது அதன் விலை தோராயமாக ரூ. 40 முதல் ரூ. 100 வரை ஆகிவிடுகிறது. இதில் தோராயமாக 20% முதல் 50% போக மீதியுள்ள தொகை ஸ்டாகிஸ்ட், ஏரியா டீலர், ஹோல் சேல் வியாபாரி ஆகியோருக்கு லாபமாக கிடைக்கிறது. இதில் பெருந்தொகை விளம்பரம் செய்யப் பயன்படுகிறது. இதுதான் எம்எல்எம்-களின் பிரச்சாரமே. அமிதாப் பச்சன், ஷாருக் கான், சச்சின் தெண்டுல்க்கர், ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் விளம்பரத்தின் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கின்றனர். இந்த பிரமுகர்களை வைத்து விளம்பரம் செய்யாமல் நுகர்வோரை வைத்தே விளம்பரம் செய்து இவர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை நுகர்வோருக்கு பகிர்ந்து கொடுப்பதே இந்த வியாபாரத்தின் திட்டம்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் திட்டம் என்னவென்றால் இந்த இடைத்தரகர்களை அகற்றிவிட்டு பொருட்களை நேரடியாக சாதாரண மக்களான நுகர்வோரே விற்பனை செய்வதுதான். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதான் இந்த வியாபாரத்தின் நோக்கம் மற்றும் கொள்கை.

இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதான் திட்டம். குறிப்பாக விளம்பரத்திற்காக செலவிடப்படும் பெருந்தொகையை மிச்சப்படுத்தி அதனை நுகர்வோருக்கு அளிப்பதுதான் இந்த எம்எல்எம். இதன்படி ஒரு விலைக்கு பொருளை வாங்கும் ஒருவர் அதன் அருமை பெருமைகளை தனக்கு தெரிந்தவருக்கு கூற அவர்களும் அதே பொருளை வாங்குகின்றனர். அந்த பொருளை விற்றதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை அவரை சிபாரிசு செய்தவருக்கு அளிப்பதுதான் இந்த எம்எல்எம்-மின் அடிப்படை கொள்கை.