Tuesday, November 3, 2009

விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக தாராவியில் திருவிளக்கு பூஜை

விசுவ ஹிந்து பரிஷத் (தாராவி) சார்பாக தாராவியில் 2008 மஹா திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாராவி மெயின்ரோடு, கோலி மைதானத்தில் இந்த பூஜை நடைபெறுகிறது. உலக நன்மை, ஜாதி, இனம், மொழி மோதல்கள் மறைய வேண்டி நடத்தப்படும் இந்த பூஜையில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Monday, November 2, 2009

தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது

மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் 61-ம் ஆண்டு விழா, இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா, சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாட்டுங்கா லேபர் கேம்ப் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சங்கரன் தலைமை தாங்க, சங்கத் தலைவர் கே.பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தாராவி பகுதி எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட், நவாப், ஓய்பெற்ற எம்டிஎன்எல் உதவி பொது மேலாளர் சந்திரசேகர், முப்பிடாதி, உத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பூமிநாதன், செயலாளர் ஜீவமணி, பொருளாளர் சுப்பையா, துணைத் தலைவர் நயினார், துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

மும்பை களிகை சேவா சங்கம் வாழ்த்து



நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாக குழு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மகர்த்தா எஸ். ஆனந்த ராஜாவுக்கு மும்பை கள்ளிகுளம் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sunday, November 1, 2009

சந்திரோதயா போக்ரே மரணம்

நவிமும்பை கலம்போலியில் வசித்து வந்த சந்திரோதயா நாராயண் போக்ரே கடந்த அக்டோபர் 25ம் தேதி மரணமடைந்தார். மராத்தியரான போக்ரே நவிமும்பை ஏபிஎம்சி மார்க்கெட்டில் டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஆவார். இவர் தமிழர் மராட்டியர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவிகளை செய்து வந்தார். அவருக்கு நவம்பர் 1ம் தேதி காலை 9.25 மணியளவில் கலம்போலி சௌரப் கோ-ஆபரேடிவ் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டத்தில் கலம்போலி தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த பல தமிழர்கள் கலந்துகொண்டனர்.

விஜய் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா



அம்பிவிலி திப்பன்னா நகரில் அக்டோபர் 31ம் தேதி நடிகர் விஜய் மக்கள் இயக்க கிளையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மும்பை மாநகரத் தலைவரான ஏ.விஜய் மணி மன்றக் கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில் ஐயப்பன், திரிசங்கு, ஜி. தினேஷ், டி.வடிவேல், வெங்கடேஷ், பாண்டியன், பாபு முதலானோர் கலந்துகொண்டனர். விழாவில் வேட்டி, சேலை, இலவச நோட்டுப்புத்தகம், பேனா வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

வங்கியில் போடாத பணம்


வங்கியில் போடாத பணத்தை
எடுக்க முடியாதது போல
புத்தகங்கள் படிக்காத வரை
எழுத முடியாது -
உருதுக் கவிஞன் சைஃபி

செ. அப்பாத்துரைக்கு மனிதநேய விருது

மராட்டிய மாநில சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் 5வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ப்ராம்ட் பிரிண்டர்ஸ் உரிமையாளரும், செல்லத்தங்க அறக்கட்டளை நிறுவனருமான செ. அப்பாத்துரைக்கு மனித நேய விருது வழங்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநில முன்னாள் தலை செயலாளர் வி.ரெங்கநாதன் ஐஏஎஸ் இந்த விருதினை வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு லேபர் விங் பொதுச் செயலாளர் எஸ். முருகேசன், டாக்டர் கே. எஸ். மணி மற்றும் கவிஞர் குணா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் விருதுக்கு பரிந்துரை செய்த மராட்டிய மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் கே.எஸ். மணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.