Sunday, November 1, 2009
சந்திரோதயா போக்ரே மரணம்
நவிமும்பை கலம்போலியில் வசித்து வந்த சந்திரோதயா நாராயண் போக்ரே கடந்த அக்டோபர் 25ம் தேதி மரணமடைந்தார். மராத்தியரான போக்ரே நவிமும்பை ஏபிஎம்சி மார்க்கெட்டில் டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஆவார். இவர் தமிழர் மராட்டியர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவிகளை செய்து வந்தார். அவருக்கு நவம்பர் 1ம் தேதி காலை 9.25 மணியளவில் கலம்போலி சௌரப் கோ-ஆபரேடிவ் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டத்தில் கலம்போலி தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த பல தமிழர்கள் கலந்துகொண்டனர்.
விஜய் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா

அம்பிவிலி திப்பன்னா நகரில் அக்டோபர் 31ம் தேதி நடிகர் விஜய் மக்கள் இயக்க கிளையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மும்பை மாநகரத் தலைவரான ஏ.விஜய் மணி மன்றக் கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில் ஐயப்பன், திரிசங்கு, ஜி. தினேஷ், டி.வடிவேல், வெங்கடேஷ், பாண்டியன், பாபு முதலானோர் கலந்துகொண்டனர். விழாவில் வேட்டி, சேலை, இலவச நோட்டுப்புத்தகம், பேனா வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
வங்கியில் போடாத பணம்
செ. அப்பாத்துரைக்கு மனிதநேய விருது
மராட்டிய மாநில சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் 5வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ப்ராம்ட் பிரிண்டர்ஸ் உரிமையாளரும், செல்லத்தங்க அறக்கட்டளை நிறுவனருமான செ. அப்பாத்துரைக்கு மனித நேய விருது வழங்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநில முன்னாள் தலை செயலாளர் வி.ரெங்கநாதன் ஐஏஎஸ் இந்த விருதினை வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு லேபர் விங் பொதுச் செயலாளர் எஸ். முருகேசன், டாக்டர் கே. எஸ். மணி மற்றும் கவிஞர் குணா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் விருதுக்கு பரிந்துரை செய்த மராட்டிய மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் கே.எஸ். மணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மும்பையில் நடைபெறும் ஜெபத் திருவிழாவில் டாக்டர் பால் தினகரன் பங்கேற்கிறார்
Saturday, October 31, 2009
மும்பையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102 வது ஜெயந்தி விழா

மும்பையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழா தாராவி கல்யாண்வாடி, சயான்கோலிவாடா, செம்பூர், நவிமும்பை கார்கர் கிளைகளில் கொண்டாடப்பட்டது. தாராவி தேவர்நகர், ஸ்ரீகணேசர் ஆலயத்தில் பால்குடம் எடுத்தல், அன்னதானம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சயான் கோலிவாடாவில் மராத்திய மாநில தேவர் முன்னேற்றப் பேரவையின் சார்பில் குரு பூஜை நடத்தப்பட்டது. பேரவையின் தலைவரான கேப்டன் தமிழ்ச் செல்வன் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
பொற்கோ நற்பணி மன்றத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது
மராட்டிய மாநில பொற்கோ நற்பணி மன்றத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா தானாபந்தரில் உள்ள நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில அமைப்பாளர் இடையன்குளம் பாஸ்கர் தலைமை தாங்க பகுதி அமைப்பாளர் ஸ்டெல்லா தொடக்க உரையாற்றினார். தென்மும்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிர்மல்ஜி, நவநிர்மாண் சேனா பிரமுகர் காவ்டே, கொலாபா பகுதி மன்ற அமைப்பாளர் பரிமளம், கோகிலா உத்தமன் ஆகியோர் முன்னிலை வகிக்க ஜெரிமெரி பகுதி விடுதலை சிறுத்தைகள் செயலாளர் எஸ். நாகராஜன் விழாவில் கலந்துகொண்டு இலவச சேலைகள், கம்பளி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Maharashtra state Porko Narpani Mandram’s 3rd year function started at the head quarters of Mandram in Thanebunder. State Organizer Idayangulam Baskar was presiding the function and area organizer Stella delivered inaugural address. South Mumbai Congress General Secretary Nirmalji, Navanirman Sena activist Gavde, Mandram’s Colaba area Organaizer Parimalam, Gokila Uttaman were present and Jarimari area Vidudalai Siruthaigal Secretary S. Nagarajan distributed free saris, blankets and provided welfare programs.
Subscribe to:
Posts (Atom)

